அவனியாபுரத்தில் வித்யா கணபதி கோவில் அஷ்ட பந்தள மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பெரியசாமி நகரில் வித்யா கணபதி கோவில் உள்ளது.இங்கு 12 வருடங்களுக்கு பின் வித்யா கணபதி கோவிலில் புனருத்ர அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவிற்காக நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கியது.அஷ்டபந்தன மகா யாகத்தில் கணபதி ஹோமம் மற்றும் நான்கு கால பூஜைகள் துவங்கி இன்று பதினொரு மணியளவில் கோவில் கலசங்களில் நாக மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் முகமூடியை அணிந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.விழாவிற்கான ஏற்பாடுகளை வித்ய விநாயகர் திருக்கோயில் பக்தர் குழு தலைவர் ராமநாதன் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர் பின்னர் இரண்டாயிரத்து மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!