உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவது மற்றும் பாதுகாப்பு நெறி முறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை சார்பில் மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம்பாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார், சிவசந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்களில் 60 பேருக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!