அச்சம்பத்து ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு கோவிட்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஏர்குடி அச்சம்பத்து ஊராட்சியில் கொரான இல்லாத மதுரை உருவாக்குவோம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் சிவக்குமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் அச்சம்பத்து ஊராட்சிமன்ற தலைவர் முத்துலட்சுமி இருளப்பன், துணைத்தலைவர் வனிதா சுரேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர் இதில் 200க்கும் மேற்பட்டோர் களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.முன்னதாக தடுப்பூசி போட வந்தவர்களுக்கு சாமியானா பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போடப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!