நரியம்பட்டி கிராமத்தில் பேச்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட, நரியம்பட்டி கிராமத்தில் பேச்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, இரண்டு நாள் யாக வேள்வி நடைபெற்று, இதைத் தொடர்ந்து, நேற்று காலை பெரிய சம்பாதி பிள்ளை பழி கொடுத்த நல்ல பிள்ளை தேவரின் ஏழு வீட்டு வகையறாக்கள் முன்னிலையில், சோழவந்தான் பிரசாத் சர்மா தலைமையில் புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் கோவிலை வலம் வந்தனர்.கோவில் கோபுர விமானத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . பேச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா அபிஷேகம் நடந்தது. எட்டூர கிராம கமிட்டி தலைவர் ஜெயபால், ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் விக்டோரியா பூர்வலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.விக்கிரமங்கலம் ஊராட்சி சுகாதாரப் பணிகள் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏழு வீட்டு வகையறாக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!