நடு சாலையில் மெகா பள்ளம். விபரீதம் ஏற்படும் முன்சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் எதிராக சாலையின் நடுவில் சுமார் 3 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பள்ளத்தில் விழுந்து மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் . மாநகராட்சி உடனடியாக இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார்கள்.  இரண்டு மரம் கிளைகளை மட்டும் வைத்து அதனை சுற்றி மிகப் பெரிய பாறாங்கற்கள் முன்வைத்துள்ளார்கள். இரு சக்கர வாகனங்கள் மோதி கீழே விழுந்து படுகாயம். உயிர் பலியும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!