மதுரை-நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விபத்து .

மதுரை – நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்து உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.மதுரை-நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த பலர் வேலை பார்த்து வந்தனர். மதுரை நாராயணபுரம் அருகே பாலம் கட்டும் பணி நடந்து வந்த போது இன்று மாலை பாலத்தில் இருந்து இரும்பு காரிடார்கள் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங்(41) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த ஆகாஷ் சிங்கின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பாலம் இடிந்து விழுந்த உடன் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு நபர்களை உடனடியாக அப்பகுதி மக்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.விபத்தில் சிக்கிய ஒருவருக்கு கை துண்டிக்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பாலம் பல பிரிவுகளாக இடைவெளி விட்டு கட்டப்பட்டு வருகிறதுபாலம் அனைத்தையும் ஒன்றாக இணைக்க இரும்பு தூண்களுக்கு இடையே ஹைட்ராலிக் ஆயில் பிரஷர் கொண்ட இணைப்பு வழங்கப்பட்டு பாலத்தைத் தாங்கி வந்துள்ளதுதற்போது அந்த ஹைட்ராலிக் ஆயில் பிரஷர் கொண்ட இணைப்பு எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டதுஇதனால் விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல் கட்டமாக அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.விபத்து நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!