வேன் நிலைதடுமாறி மரத்தில் மோதி, கிளீனர் சாவு: டிரைவர் படுகாயம்.

மாட்டுத்தாவணியிலிருந்து- தென்காசி மாவட்டம், கடைய நல்லூருக்கு காய்கறி ஏற்றி வேன் சென்று கொண்டிருந்தது.திருமங்கலம் ராஜபாளையம் மெயின் ரோடு, ஆலம்பட்டி அருகில் நிலை தடுமாறி வேன், அதிகாலைமரத்தின் மீது மோதியது.இந்த விபத்தில், வேன் டிரைவர் காயமடைந்தார். மேலும், கிளீனர் முருகையா வயது 60. சம்பவ இடத்தில் இறந்து விட்டார். இறந்தவரை, திருமங்கலம் தீயணைப்பு நிலைய பணியாளர் சேர்ந்து மீட்டு, ஹைவே பெட்ரோல் சார்பு ஆய்வாளர் அய்யணனிடம், நிலைய தீயணைப்பு அலுவலர் ஜெ ஜெயராணி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ஓப்படைத்தனர்.இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

. .செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!