பனையூர் வாலகுருநாத ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம்.

மதுரை பனையூர் கிராமம் அருள்மிகு வாலகுருநாத ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் சுவாமி, அம்பாள் பரிவாரதேவதை விமானங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக யாகபூஜைகள், மகா பூர்ணாகுதி பூஜைகள் நடைபெற்றன.திருக்கோயில், மஹா கும்பாபிஷேகம் காண, சுற்றுவட்டார கிராமமக்கள் ஆயிரகணக்கானோர், திரண்டிருந்தனர்.கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அருஞ்சுவை அன்னதானம் வழங்கப்பட்டது சிறப்பாக ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியார் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!