சாலையோரம் நின்றிருந்த முதியவர் மீது கார் மோதி பலி.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கிழவநேரியில் அழகுமலை வயது 55 கூலித்தொழிலாளி வயிற்று பிழைப்பிற்காக சாலையோரம் உள்ள வேப்பமரத்தின் வேப்பம் பழங்களை சேகரித்துக் கொண்டு இருந்தபோது சேடபட்டிதயில்ல் இருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு கார் க கட்டுப்பாடின்றி அதிவேகமாக வந்த கார் சாலையோரம் வேப்பம்பழம் சேகரிதுக்கொண்டிருந்த முதியவர் அழகு மலை மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!