மேலூர் அருகே 15 வயது சிறுமியை திருமண ஆசைக்கூறி அழைத்துச் சென்றதாக ஒருவர் போக்சோ வழக்கில் கைது..

மேலூர் அருகே 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்றதாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை திருமண ஆசைக்கூறி அழைத்துச் சென்றதாக பரமக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து . மற்றும் அவரது 28 வயது மகன் வேல்ராஜ் ஆகியோர் மீது மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். இதன் பேரில், வேல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!