நகை திருடியவா்கள் கைது

மதுரை மாவட்டம். ஒத்தக்கடை அருகே சின்னராஜாகூரை சேர்ந்த அண்ணலட்சுமி (55) என்பவர் வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்று விட்டு வந்து பார்த்த போது, வீட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 7- சவரன் தங்க நகைகள் மற்றும் ஏ.டி.எம் கார்டு திருடு போய்விட்டதாக, ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில், ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து, அதே ஊரைச் சேர்ந்த சிவா (20) கத்தபட்டியை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவர்களை கைது செய்தும் ,நகை மற்றும் ஏ.டி.எம் கார்டை பறிமுதல் செய்தும் , நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!