மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் மாநகராட்சி பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்.

மாநகராட்சியில் பணியாற்றிய, ஒப்பந்த பணிக்கா நிலுவையில் உள்ள 36-கோடி பாக்கி பணத்தை தர வேண்டியும், மாநகராட்சி வளாகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ராஜூ செயலாளர் முருகானந்தம் பொருளாளர் சரவணன் தலைமையில், அனைத்து ஒப்பந்ததாரர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர், ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!