வீட்டிற்குள் வந்து திருடி தப்பி ஓடிய திருடனை பிடித்து கொடுத்த விவசாயிக்கு மதுரை சரக டிஐஜி பாராட்டு

சிலைமான் காவல் நிலைய எல்கையில் உள்ள ராணி மங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் வைகைநதிஆசை(35). விவசாயி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்து 3 செல்போன்களை திருடிவிட்டு தப்பி ஓடிய ஆண்டார் கொட்டாரம் ஆகாஷ் என்பவரை பிடித்து சிலைமான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.துணிச்சலாக திருடனை விரட்டி சென்று பிடித்துக் கொடுத்த விவசாயி வைகைநதிஆசையை மதுரை சரக டிஐஜி  ஆனி விஜயா  நேரில் அழைத்து பாராட்டினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!