மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வருகிறது இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் இல்லங்களில் தூங்க முடியாமல் புழுக்கத்தில் தவித்து வந்தனர் இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் பலத்த இடி மின்னலுடன் சூறைக்காற்றுடன் பழங்காநத்தம் காளவாசல் எஸ் எஸ் காலனி வசந்த நகர் மாடக்குளம் பெரியார் நகர் ஆண்டாள்புரம் டிவிஎஸ் நகர் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது இதனால் பூமி குளிர்ந்தது காற்றடித்த காரணத்தினால் எஸ் எஸ் காலனி காளவாசல் உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன இதனை மதுரை தீயணைப்பு துறையினர் அகற்றினர் காளவாசல் பகுதியில் ஒரு பனை மரம் சாய்ந்தது டீக்கடை மற்றும் இரு இரு சக்கர வாகனம் சேதம் அடைந்தது,,
, செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.