எஸ்.டி.பி.ஐ கட்சி 13ம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட தலைமையகத்தில் ஜூன் 21 காலை மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார் கொரானா காலகட்டங்களில் மக்கள் பணியாற்றிய மதுரை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது 50க்கும் மேற்பட்டோர்களுக்கு அரிசி மற்றும் சமையல் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது துணை தலைவர் சீமான் சிக்கந்தர் சுப்பிரமணியன் செயலாளர் சிக்கந்தர் பொருளாளர் யூசுப் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் காஜா முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்இதைத் தொடர்ந்து மதுரை அனைத்து கிளைகளிலும் கொடியேற்றம்,மரக்கன்றுகள் நடுதல்,முககவசம் இனிப்புகள் வழங்குதல், அரிசி மளிகை பொருட்கள் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல், நிகழ்சிகள் நடைபெற்றன மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!