தமிழக அரசு அறிவித்துள்ள 2000 ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய பல சரக்குகளை சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு வழங்கினார் .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதி மற்றும் கிராம பகுதிகளான பல்வேறு பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள 2000 ரூபாய் நிதி மற்றும் 14 பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்களை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இன்று துவங்கி வைத்து 7 ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் ஊராட்சிஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் வட்டவழங்கல் அலுவலர் பாஸ்கரன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு அவர்களும் இலவச பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினர்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!