மேலூரில் போலீஸார் ஏற்படுத்திய விழிப்புணர்வு:

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை வார்டு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களுக்கும், உடன் இருப்போருக்கும்,குழந்தைகளை எவ்விதத்தில் பாதுகாப்பது குறித்தும்,சித்தமருத்துவ மாத்திரைகள்,முகக் கவசங்கள்,சனிடைசர் கள், கபசுர பொடி வழங்கியும் மத்திய, மாநில அரசு அறிவித்தபடி கொரோனா குறித்து மேலூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் எஸ்.ஐ. பாலா கிருஷ்ணன், காஞ்சி முருகேசன், சூதா ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் சேவையை மருத்துவர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!