முள்ளிபள்ளத்தில் ஏழை மக்கள் ஆதரவற்றோருக்கு உணவு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திமுக மற்றும் ஊராட்சி மன்றம் கிராம மக்கள் சார்பாக கொரோனாவை தடுக்க தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏழை மக்கள் ஆதரவற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்க்கு அரிசி மளிகை பொருட்கள் கபசுர குடிநீர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக செயலாளர் கேபிள் ராஜா துவக்க சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாவட்ட துணைத் தலைவர் சேகர் துணைச் செயலாளர் ராஜா ஒன்றிய துணைச் செயலாளர்கள் கேபிள் ராஜா ராஜாராம் வக்கீல் முருகன் ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகா வீரபாண்டியன் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர் வாடிப்பட்டி தாசில்தார் பழனி குமார் யூனியன் கவுன்சிலர் ராஜா ஊரடங்கில் மக்கள் விழிப்புணர்வுடன் வாழவேண்டி ஆலோசனை கூறினார். இதில் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் மன்ற உறுப்பினர்கள் சந்தான லட்சுமி முல்லை சக்தி மற்றும் உறுப்பினர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி மாவட்ட பிரதிநிதி பேட்டை கண்ணன் ஒன்றிய பிரதிநிதிகள் தவமணி செல்வராஜ் நாகேந்திரன் பிச்சைமணி பேரூர் துணைச்செயலாளர் சிபி சிற்றரசு ராஜேந்திரன் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!