சவேரியார் சமுதாய கூடத்தில் நடைபெற்ற கோவிட்19 தடுப்பூசி முகாமில். மதுரை தெற்கு தொகுதி எம் எல் ஏ பூமிநாதன் ஆய்வு.

தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவல் குறையாத நிலையில் கட்டுபடுத்தவும் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் சமூக அமைப்புகள் மூலம் கோவிட்19 தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுவருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக மதுரை கீழ்மதுரை ஸ்டேசன் ரோட்டில் உள்ள சவேரியார் சமுதாய கூடத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியில் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த முகாமில் சுற்றுப்புற பகுதி மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!