குப்பையில் பற்றிய தீ பைபாஸ் சாலை புகை மூட்டம் .

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு வானமாமலை நகர் 3 குப்பை தொட்டிகள் உள்ளது இதில் மர்ம நபர்கள் எவரொருவர் சிகரெட்டை அணைக்காமல் குப்பையில் போட்டதால் மூன்று தொட்டியிலும் தீ மளமளவென எரிய ஆரம்பித்தது பைபாஸ் சாலை முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது உடனடியாக அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் 76வது வார்டு பொறுப்பு சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி குடிநீர் டிராக்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் கூறுகையில்…… யாரோ மர்ம நபர்கள் சிகரெட்டை குடித்துவிட்டு அணைக்காமல் குப்பைத் தொட்டியில் போட்டதாலே தீப்பிடித்தது காரணமென தெரிவித்தார் தகவல் தெரிவிக்கப்பட்ட அடுத்த ஐந்து நிமிடத்தில் தீயை அணைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர் என தகவல் தெரிவித்தார் பொதுமக்கள் யாரும் தயவு செய்து குப்பைகளை தங்கள் வீட்டு வாசலிலோ அல்லது தெருவிலோ தீ வைத்து எரிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் இதனால் மாசு பெறுவதுடன் சுவாசக் கோளாறு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் மீறி குப்பைகளை எரிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!