கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது

கரிமேடு  காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சோலைராஜ் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுரை காளவாசல் சந்திப்பு அருகே ஆட்டோவில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்தார். மேலும் விசாரணை செய்ததில் ஒரு பெண் உட்பட இரண்டு நபர்கள் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பஞ்சவர்ணம் 80,  வெங்கடேஷ் பிரசாத் 22 என தெரியவந்தது. எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.8260/- மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் கைப்பற்றினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!