கப்பலூர், முத்தாலம்மன் கோவில் தெருவிலுள்ள மூங்கில் தோட்டத்தில் தீ விபத்து

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கப்பலூர் முத்தாலம்மன் கோவில் தெருவில் பெரில் ஜோசப் என்பவரது மூங்கில் தோட்டம் உள்ளது.இங்கு இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையான திருமங்கலம் தீயணைப்புத் மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் அப்பகுதிக்கு சென்று மூங்கில் தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.தீவிபத்தில் அப்பகுதியில் சென்ற 4 மின்சார ஒயர்கள் அறிந்தது இதனால் அப்பகுதியில் தற்போது மின்சாரம் தடை பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!