இராஜபாளையம் தமிழ்நாடு சைகை அணி -5 (என்.சி.சி) அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவ மனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு 130 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலருக்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் அதை கருத்தில் கொண்டு NCC அதிகாரிகள் சார்பில்நோயாளிகளுக்கு உயிர் காக்கும் வகையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் தலைமை மருத்துவர் பாபுஜி அவர்களிடம் என்.சி.சி. அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மேஜர் அனந்தநாராயணன், முத்துப் பெருமாள் மற்றும் ராஜூக்கள் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெகந்நாத் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!