விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை என அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் அதிகம் உள்ள நிலையில் .பாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாக நகர் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் விதமாக இராஜபாளையம் தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையில் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நேரு சிலை பகுதியிலிருந்து இராஜபாளையம் நகர் முழுவதும் தீயணைப்பு துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்தனர்.பொதுமக்கள்முக கவசம் அணிந்து வெளியில் வர வேண்டும். தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என காவல் துறையும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்..
.செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.