ஜவுளி கடையில் நள்ளிரவு திடீர்தீ விபத்து

மதுரை தெற்குமாசி வீதி மஹால் இரண்டாவது தெருவில் அமைந்துள்ள தனியார் துணிக்கடையில்  நள்ளிரவு சுமார் 11.30 அளவில் புகை வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .தகவலறிந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.. எனினும் தீ கட்டுக்கடங்காமல் இருந்து கொண்டு இருந்தது. சுமார் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தண்ணீர் தேவைப்பட்டதால் மாநகராட்சி குடிநீர் வாகனமும் அனுப்பானடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வாகனம் ஒன்றும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது . மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!