மருத்துவர் உயிரிழப்பு:

மதுரை மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சண்முகப்பிரியா என்ற மருத்துவர் பணியாற்றி வந்தார். இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்ததாக தெரிகிறது . கடந்த 3 நாட்களுக்கு முன்பு சண்முகப்பிரியாவுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.கர்ப்பிணி பெண் என்பதால் இவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நிலையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!