வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இசைக்கலைஞர்களுக்கு தடையின்றி தொழிலில் ஈடுபட முதலமைச்சர் உத்தரவிட கோரிக்கை .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதி சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் . பேண்ட் சேட். நாதஸ்வரம் தப்பாட்டம் உள்ளிட்ட கலைஞர்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர் இவர்களுக்கு கடந்த ஆண்டுகொரோனா தொற்றின் போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது .அதேபோல் தற்போது இரண்டாவது அலையான கொரோனா தொற்றினால் ஊரடங்கு அறிவித்துள்ள இந்த நிலையில் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும்பங்குனி சித்திரை போன்ற மாதங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் அதைத்தொடர்ந்து வைகாசி மாதம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளதுஇது இடைக்கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இவர்களுக்கு தடையின்றி தங்கள் தொழில் செய்ய முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என சுமார் 70க்கு மேற்பட்ட இசைக் கலைஞர்கள் இசை வாத்தியங்களை இசைத்து தங்களுடைய கோரிக்கையை தமிழக முதல்வருக்கு வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!