அரசு டாக்டர் வீட்டில் புகுந்துநகை திருட்டு.

மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் நகரில் வசித்து வருபவர் சேக் இக்பால் உசேன் 41. இவரும் இவரது மனைவியும் மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் வைத்து இருந்த 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக டாக்டர் ஷேக் இக்பால் உசேன்எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!