வெள்ளலூர் கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் சென்று கபசுர குடிநீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

கொரானா பெருந்தொற்றை ஒழிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவது நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கொடுப்பது என்று பல்வேறுவிதமான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும் தனியார் தொண்டுநிறுவனங்கள் சமூக அமைப்புகள் கபசுர குடிநீர் உள்ளிட்டவை வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அந்தவகையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற கௌசி என் தலைவர் மற்றும் துணை பழனி முருகன் தலைவர் மற்றும் ராமலிங்கம் சொந்த முயற்சியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மற்ற ஊராட்சிகளுக்கு முன் உதாரணமாக அனைத்து வீடுகளுக்கும் சென்று கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!