மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கு சென்று திரும்பிய பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறிப்பு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பெண்களிடம் அடுத்தடுத்து செயின் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரையில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய மதுரை மாவட்டம் மாத்தூர் பூண்டிவிலக்குவை சேர்ந்தவர் இந்திரா 59 .இவரிடமிருந்து 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமிகள் திருடி விட்டனர். இவரைப்போல மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் கம்பர் தெருவை சேர்ந்த அமுதா 62 என்பவரிடமிருந்தும் 3 பவுன் தங்க செயினை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக இந்திராவும் , அமுதாவும் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து இருவரிடமும் செயின்திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!