அடகு நகையை மீட்டு விற்பனை செய்து தருவதாக கூறிநிதிநிறுவன ஊழியரிடம் மோசடி.

மதுரை அடகு நகை மீட்டு விற்பனை செய்து தருவதாக கூறி நிதி நிறுவன ஊழியரிடம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.உசிலம்பட்டி நடுமுதலைக்குளத்தை சேர்ந்தவர் தமிழ் பாண்டி 28 .இவர் மதுரையில் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் பழங்காநத்த்தைசேர்ந்த வினோத் குமார் என்பவர் தனது அடகுநகையை மீட்டு விற்பனை செய்து தருவதாக கூறி ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாய்வாங்கியுள்ளார்.பின்னர் வாங்கியபணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் பாண்டி சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமாரைதேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!