மதுரைபெத்தானியாபுரம் பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் விஜயா65. இவர் கட்டிலில் படுத்திருந்தார். கட்டிலுக்கு அருகே சமையல் செய்த நிலையில் ஸ்டவ்அடுப்புஎரிந்துந்து கொண்டிருந்தது. அப்போது கட்டிலில் படுத்திருந்த விஜயா ஸ்டவ்அடுப்பின்மீது தவறி விழுந்துவிட்டார். இதில் உடலில் தீப்பற்றி உடல் கருகிய நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து மூதாட்டி விஜயாவின் அக்கா சந்திரா கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.