கழிவு வெளியேறுவது தடுக்கப்படுமா.

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட 9வது வார்டு பகுதி தத்தனேரி மெயின் ரோட்டில் உள்ள சலவைக்கூடத்தில் கடந்த சில நாட்களாக சலவை தொழிலாளர்கள் வேலை செய்யும் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் அடைத்து வெளியேறி வருகிறது. துர்நாற்றம் வீசும் கழிவு நீரில் நடந்து சென்று தான் பணிகளை செய்து வருகின்றனர். இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் யாரும் கண்டு கொள்ள வில்லை. தற்போது இரண்டாம் கட்ட கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து இங்கு தொற்று நோய் வரும் அவலத்தில் உள்ளனர். இதை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!