கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேரையூர் கிராமத்தில் நடைபெற்ற இறகு பந்து போட்டி

விளையாட்டில் ஆர்வம் காட்டி திறமையை வெளிபடுத்தி வரும் கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மதுரை மாவட்டம் பேரையூர் கிராமத்தில் எஸ்விஎன் உள்விளையாட்டரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் முதன்முறையாக மாநில அளவிலான இறகு பந்து போட்டி எஸ்விஎன் பயிற்சி மைய தலைவர் சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.இதில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உட்பட சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் அனைவர்க்கும் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முத்துரத்தினம், பயிற்சியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!