ஆடு திருட்டு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது .

மதுரை அருகே ஹார்விபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் நீலமேகம் 39 .இவருக்கு சொந்தமான ரூபாய் 5000 மதிப்புள்ள ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக நீலமேகம் திரு நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த இரண்டுசிறுவர்கள் மற்றும் குமரேசன் 19 ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!