மதுரையில் சிலிண்டர் வெடித்துஒருவர் பலி பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதம்

மதுரை பாலரங்காபுரம், EE ரோடு. 1வது தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இன்று அதிகாலை திடீரென இவர் வீட்டில் வைத்திருந்த சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. சம்பவ இடத்திலேயே சரவணன் கருகி பலியானார்.சிலிண்டர் வெடித்ததில் அருகே இருந்த ஜிஆர்டி திருமண மண்டபத்தின் ஒரு பக்க சுவர் மற்றும் மேற்கூரை சேதமடைந்து அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்

அதோடு அப்பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.வெடித்து சிதறியதில் இடிபாடுகளில் சிக்கியிருந்த சரவணன் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதிகாலைப் பொழுதில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!