திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒர்க்ஷாப் ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒர்க்ஷாப் ஊழியர் மர்ம சாவு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை அருகே உமச்சிகுளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் 43 .இவர் ஜெய்ஹிந்துபுரம் சுப்பிரமணியபுரம் மூன்றாவது தெருவில் இரண்டு மாதங்களாக ஒர்க் ஷாப் ஒன்றில் பணியாற்றி வந்தார். 15 நாட்களுக்கு முன்பு ஒர்க்ஷாப்பில் வைத்திருந்த பணம் திருடு போனது தொடர்பாக அவர் மீதுதிருட்டு குற்றம் சாட்டப்பட்டு அவருக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த ஒர்க்ஷாப் அருகே தமிழ்ச்செல்வன்மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவருடைய அண்ணன் கதிரேசன் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தம்பி தமிழ்செல்வனின் சாவில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார் .இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!