மதுரை மேலமாசி வீதியில் மினி ட்ரான்ஸ்பார்மரில் அதிக மின்பளு காரணமாக தீவிபத்து -தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு பெரும் விபத்தை தவித்தனர்.

மதுரை மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள TM கோர்ட் பகுதியில் உள்ள மினி டிரான்ஸ்பார்மரில் 25 கிலோவார்ட் திறன் கொண்டதில் இன்று திடீரென அதிகப்படியான மின் கடத்தல் ஏற்பட்டதால் அதில் உள்ள வயர்களில் தீப்பிடித்து எரியதுவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டத்தை அடுத்து அப்பகுதி மக்கள்.. மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, தொடர்ந்து இதனால் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளில் மின்தடை ஏற்பட்டதை மின் ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருக்கின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!