தனியார் அப்பார்ட்மெண்டில் திடீர் தீ விபத்து .

மதுரை மாவட்டம் தேனி மெயின் ரோடு விராட்டிபத்து தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது இது இரண்டாவது தளத்தில் சீனிவாசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் வேலை விஷயமாக வீட்டைப் பூட்டிவிட்டு இவர் கொடைக்கானல் சென்று உள்ளார் இந்த நிலையில் 5.30 மணி அளவில் மாலை அவர் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசாரும் மதுரை டவுன் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் அதற்குள் அங்குள்ள பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து எரிந்து கொண்டிருந்த தீயை அணை அணைத்தனர். பொதுமக்களின் துரிதசெயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது . இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது இதில் ஃப்ரிட்ஜ் மற்றும் ஒரு சைக்கிள் மற்றும் மரச்சாமான்கள் தீயில் கருகி சாம்பல் ஆனது நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!