வீட்டை உடைத்து பணம் கொள்ளை.

மதுரை டிவிஎஸ் நகரில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை டிவிஎஸ் நகர் மீனாட்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் கர்னல்சுபாஷ். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த கொள்ளை தொடர்பாக கர்னல் சுபாஷ் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!