ஜெய்ஹிந்த்புரத்தில் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு.

மதுரை ஜெய்ஹிந்து புரத்தில் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.ஜெய்ஹிந்துபுரம் சோலை அழகுபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மரியலீலா 62. இவரிடம் அறிமுகமான மர்ம நபர்கள் முதியோர் பென்சன் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். அதற்காக செலவு தொகை வேண்டும் என்று கேட்டுள்ளனர். இந்த நிலையில் வீரகாளியம்மன்கோவில் அருகே உள்ள மாடியில் உள்ள தனது கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு அந்த மூதாட்டி அவர்களிடம் இரண்டே முக்கால் பவுன் தங்க நகைகளை கொடுத்துள்ளார்.அவற்றைவாங்கிச் சென்ற அந்த நபர்கள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர் .இது தொடர்பாக மரியலீலா ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!