மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பைபாஸ் ரோடு சொக்கலிங்க நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி குமார் 48 இவர் கென்னட் ரோடு ரோடு சந்திப்பில் சென்றபோது அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தி முன்னூரை மூன்று வாலிபர்கள் பறித்துச் சென்றுவிட்டனர். இந்த வழிப்பறி தொடர்பாக பழனி குமார் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக் என்றகாதன் கார்த்திக் 32, கார்த்திக் என்ற சுடுதண்ணீர கார்த்திக் 30, மதன்குமார் 36 ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.