சோழவந்தான் அருகே இறந்த கோயில் காளைக்கு அஞ்சலி.

மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பில் காளியம்மன் கோயில் உள்ளது.இக்கோயில் காளை காளி எனும் பெயரில், ஊரில் செல்லப் பிள்ளையாக அனைவரிடமும் அன்போடு பழகி வந்தது.இந்நிலையில் தற்போது இக்காளையின் உடல் நலம் பாதித்தது.கிராம மக்கள் தேவையான மருத்துவ உதவி செய்து வந்தனர்.இருப்பினும் இன்று காலை இக்காளை மரணமடைந்தது. இதையறிந்த ஊர் மக்கள் கண்ணீருடன், மாலை,வேஷ்டி,துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் காளியம்மன் கோயில் அருகே கிராம மக்கள் கண்ணீருடன் நல்லடக்கம் செய்தனர்.பட விளக்கம்… கச்சிராயிருப்பில் இறந்த கோயில் காளைக்கு கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!