திருப்பரங்குன்றத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில்100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு .

வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி செய்ய வேண்டிய கடமை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளான சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்டர விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மேலும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் தூண்டு பிரச்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!