பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருமங்கலம் இராஜாஜி சிலை அருகே திமுகவினர் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக அரசு வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக திமுக எம்எல்ஏ மூர்த்தி குற்றம் சாட்டினார்.பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் நாடு முழுவதும் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவினர் பெட்ரோல் டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். .ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் மூர்த்தி மற்றும் சரவணன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்தவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்து திமுக தொண்டர்களிடையே உரையாற்றிய மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏ மூர்த்திபெட்ரோல் டீசல் விலை சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களை மிகவும் சிரமப்படுகிறார்கள் இதனை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை எனவே வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் மேலும் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுக அரசு வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது இது தேர்தல் நெருங்கி வருவதால் வாக்குக்காக செயல்படுத்த முடியாத அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் மருத்துமனை விஷயத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!