தமிழகத்திலேயே பொது இடத்தில் முதல் முறையாக அமைக்கப்படும் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு சிலை

மதுரை சிம்மக்கல் பகுதியில் தமிழகத்திலேயே பொது இடத்தில் முதல் முறையாக அமைக்கப்படும் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு 9.1/2 உயரத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள,பீடம் மற்றும் சிலை மொத்தமாக சுமார் 23 டன் கொண்ட சிலையை தற்போதை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.இந்த திருவுருவச்சிலை சிறப்புமிக்க கட்டிடக் கலைஞர்களால் அடித்தளம் அமைக்கப்பட்டு அறிவாலயத்தில் அமைந்து உள்ளது போல் கம்பீரமான பீடம் அமைக்கப்பட்டு உள்ளது,பொதுமக்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்து செல்லும் வகையில் தலைவர் கலைஞர் அவர்களின் திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் சென்று பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு வருவாய் துறையிடம் அனுமதி பெற்று பொது இடத்தில் வைக்கப்படும் இந்த தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை என்பது கழகத்திற்கு கிடைத்த வெற்றியாக திமுகவினர் பார்க்கின்றனர்,

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!