வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகர,வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக வேளாண்மை சட்டத்தை வாபஸ்பெறக் கோரியும் டெல்லியில்் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் போராட்டகளத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலிசலிியும் விவசாயிகளை உயிர் பலி வாங்கிய மோடி அரசை கண்டித்துஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு மாவட்டதலைவர் ஆலந்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் ஐ.கே.குருநாதன்,பழனிவேல் முன்னிலை வகித்தனர். ஒ.பி.சி.அணி மாநிலசெயலாளர் ஓ.எம்.முருகானந்தம் வரவேற்றார்.இதில் , ஒ.பி.சி.அணி மாவட்டதலைவர் முருகன், எஸ்.சி.எஸ்.டி.துறை மாநில துணைத் தலைவர் மூர்த்தி, மாவட்ட தலைவர் சங்கரபாண்டி, அழகுசுப்பையா மகிளா காங்கிரஸ் மாவட்ட த் தலைவர் செல்லப்பாசரவணன், நகர துணைத் தலைவர் அய்யங்காளை, அழகு பிள்ளை இளைஞர் காங்கிரஸ் இளவரசன் தீபக் ஆனந்த், டிராக்டர் மாரியப்பன் ஜெயமுருகன் காட்டு ராஜா, அ.நா பட்டி கந்தசாமி, ராஜா உள்பட பலர்கலந்துகொண்டனர். முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் விராலிப்பட்டி முத்துநன்றிகூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!