பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர மற்றும் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணாவின் 52வது நினைவு நாளையொட்டி இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழக பொறுப்பாளர் NM கிருஷ்ணராஜ் தலைமையில் நகர செயலாளர் பாஸ்கர் ஒன்றிய செயலாளர் RM குருசாமி ,நவரத்தினம் ,கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் வனராஜ் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் AD துரைமுருகேசன், பூபதிராஜா கூட்டுறவு வங்கி தலைவர் ராதாகிருஷ்ணராஜா, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர் பின்பு வர உள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!