உறவினர் வீட்டில் விருந்து ஒன்றில் அளவுக்கு அதிகமாக கறிசோறு சாப்பிட்டவர் மயங்கி விழுந்து பலியானார்.

மதுரை ராஜா மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 43 இவர் நேற்று உறவினர் வீட்டில் விருந்து ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் அங்கு கறிசோறு பரிமாறப்பட்டது .அதில் , அளவுக்கு அதிகமாக உட்கொண்ட நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குகொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கண்ணன்பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவருடைய மனைவி சுகந்தி கொடுத்த புகாரின் பெயரில் திலகர்திடல்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!