திருப்பாலையில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி.

மதுரை கண்ணணேந்தல் ஜி ஆர் நகரை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் ராஜ்குமார் .இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் .இந்த விபத்து குறித்து மனைவி தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!